குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2026-04-26 17:24 GMT

குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பண்ணைக்கிணர் ஊராட்சி. பண்ணைக்கிணர் முதல் கோமங்கலம் வரைசெல்ல கிராம இணைப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைந்த தானியங்களை இந்தசாலை வழியாக கொண்டு செல்கின்றனர். சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக காணப்படுவதால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சாலை மிகவும் சேதமடைகிறது. இந்த கிராம இணைப்பு சாலையை கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அந்த சாலையில் பயணிப்பவர்கள் நிலைத்தடுமாறி விழுவதால் காயங்களுடன் செல்கின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்