திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவல் முதல் திருத்தேங்கூர் வரை தார்ச்சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைக்கும் பணி தொடங்கியது. பல வாரங்கள் ஆகியும் சாலை அமைக்கும் பணி முடியவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் கொட்டப்பட்ட கற்கள் சிதறிகிடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.