ஓசூர் முல்லைநகரில் ராயக்கோட்டை சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி முன்பு சாலை மிகவும் குறுகலாகவும், குண்டும், குழியுமாகவும் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் பள்ளி உள்ளது என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாணவர்கள் நலன் கருதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், ஓசூர்.