கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த தொட்டதிம்மனஅள்ளி ஊராட்சி நெல்லூர் பிரிவு ரோடு முதல் எடவனஅள்ளி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை தார்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குண்டும், குழியுமான தார்சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
-சி.கிருஷ்ணமூர்த்தி, எடவனஅள்ளி, கிருஷ்ணகிரி.