சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-08-17 15:06 GMT

திருச்சி பெரிய மிளகுபாறையில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் சாலையில் ஏராளமான மாடுகள் காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரிகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் மாடுகள் சாலையில் சண்டை போட்டு கொண்டு வாகனங்கள் மீது வந்து மோதிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக கொள்கிறோம்.

மேலும் செய்திகள்