குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-16 14:30 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி, ஓலப்பாளையம் அருகே அதியமான் கோட்டையில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் மெயின் சாலைக்கு செல்வதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை போடப்பட்டது. தற்போது இந்த தார்சாலை நெடுகிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த தார் சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்