விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2022-08-16 13:07 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இருந்து சித்தன்னவாசல், கூத்தினிப்பட்டி, மெய்வழிசாலைக்கு செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் ஒரு புறம் உடைந்து பள்ளமாகவும், மற்றொரு புறம் சாலையில் பெரிய பள்ளம் ஒன்றும் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் அடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே இதனை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்