அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வெற்றியூர் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் வகையில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் சாலையை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.