திருச்செந்தூர் கோவில் தெருவில் பேவர்பிளாக் கற்கள் அகற்றப்பட்டு பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. எதற்காக அகற்றப்பட்டு உள்ளது என தெரியவில்லை. தற்போது அந்த சாலை, சரள் கற்களாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே சரிந்து அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே பக்கவாட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பேவர்பிளாக் கற்களை பதித்து சாலையை சமப்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.