ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தில்லையேந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட டி.எஸ்.பி. சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், மேடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?