சேலம்-கரூர், கரூர்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நடுவில் சென்டர் மீடியா கட்டப்பட்டு பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆங்காங்கே சென்டர் மீடியாவை உடைத்து அந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சென்டர் மீடியாவில் குறுக்கே உடைக்கப்பட்டுள்ள பகுதிகளில் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்து விபத்தை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.