குண்டும், குழியுமான தார் சாலை

Update: 2022-08-14 15:43 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா குரும்பப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலைகள் சிதலமடைந்து குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் செய்திகள்