கரூர் மாவட்டம், திருமாநிலையூரில் திருச்சி செல்லும் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.