ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் ஊராட்சி குதிரைமொழி கிராமத்தில் இருந்து பனை தொழிலாளர்கள் குடியிருப்பு செல்லும் சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளன. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேலும் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நிலவும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.