கோவை ஆத்துப்பாலத்தில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதற்காக சாலை நடுவில் பள்ளம் தோண்டப்பட்டது. குழாய்கள் அமைக்கும் பணி நிறைவுற்ற பிறகும் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.