தரைப்பால பணிகள் மந்தம்

Update: 2022-08-12 15:36 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதி திருமருகல் சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நடந்து வரும் தரைப்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்