ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்

Update: 2022-08-12 14:51 GMT

நாமக்கல்லில் இருந்து மரூர்ப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே தண்டவாளம் உள்ளது. அதன் வழியாக ரெயில்கள் வரும் பொழுது, ரெயில்வே கேட் போடப்படுகிறது. அதனால் அந்த வழியாக வேலைகளுக்கு செல்பவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்