விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணற்ற மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி இருக்கும் சாலையில் வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.