சேற்றில் நடந்து செல்லும் பொதுமக்கள்

Update: 2022-08-12 12:30 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த மேலவிடையல் ஊராட்சியில் குப்பசமுத்திரம் புதுத்தெரு உள்ளது. இந்த பகுதியில் போதிய சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. அதுமட்டுமின்றி பொதுமக்கள் சேற்றில் நடந்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்