நாய்களை பிடித்து செல்லவேண்டும்

Update: 2022-08-12 12:26 GMT
குடவாசல் தாலுகா கொரடாச்சேரி ஊராட்சியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியல் வழியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாக நாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை கூட்டமாக சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் அச்சத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். மேலும், வாகனங்களை நாய்கள் விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்