தினத்தந்தி புகார் பெட்டி எதிரொலியாக சாலை சீரமைப்பு

Update: 2022-08-12 12:24 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம், மூலங்குடி சாலையில், வடபாதி என்ற இடத்தில் மூன்று பாசன வாய்க்கால் பாலம் புதிதாக கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால், மூன்று பாலத்திலும் சாலையில் கற்கள் சிதறிய நிலையில் காட்சி அளித்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுவந்தனர். இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்