தார்ச்சாலை அமைக்கும் பணி விரைவுப்படுத்தபடுமா?

Update: 2022-08-11 13:09 GMT
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை கோம்பூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள வெள்ளையாற்றின் கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சாலையில் கானூர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு சாலை ஆற்றில் விழுந்தது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் கரை ஏற்படுத்தி புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. மழைக்காலங்களில் இந்த வழியாக செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்