திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி மெயின் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இவை அந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது சாலையோரம் ஒதுங்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.