பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-08-11 12:52 GMT
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, கம்மங்குடி முதல் குப்பம் பாலம் வரை செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து குணடும், குழியுமாக காணப்படுகிறது. சாலையில் கற்கள் பெயர்ந்து தற்போது மண் சாலையாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்கள் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகள்