சாலை பணி விரைவுபடுத்தப்படுமா?

Update: 2022-08-11 11:44 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தால‌ம் பகுதி திருமணஞ்சேரி கோவில் வாசலில் இருந்து ஆற்றங்கரைக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனால் சாலையை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதன்காரணமாக புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் சாலை அமைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெறாமல் உள்ளது. இதனால் சாலை முழுவதும் ஜல்லிக்கற்கள் பரவி கிடக்கின்றன. அதில் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்