வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-11 11:43 GMT
ரிஷிவந்தியம் அருகே புதூரில் திருவண்ணாமலை-கள்ளக்குறிச்சி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த சாலை வழியாக வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்கள் சாலையை கடக்கும் போது விபத்தில் சிக்குகின்றனர். இதனால் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்