அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி வழியாக திருச்சி முதல் சிதம்பரம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி தேசிய நெடுஞ்சாலையில் வி.கைகாட்டி (தேளூர் பாலம்) உப்பு ஓடை அருகே சர்வீஸ் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் புதிய வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே புதிய வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூசி அதன் அருகே சிவப்பு நிற பிரதிபலிப்பான்கள் பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.