வெள்ளத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 12:35 GMT
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியம் மேமாத்தூர் பகுதியில் மஞ்சலாறு பாலம் உள்ளது. இந்த பாலத்தில் உள்ள சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் இருந்து இளையாளூர் வரை செல்லும் சாலை கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்து உள்ளது. இதனால் சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடித்து செல்லப்பட்டு குறுகிய அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகனஓட்டிகள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்