நெல்லை மாநகராட்சி 1-வது வார்டு சிதம்பரநகரில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னதாக தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.