சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-09 14:05 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருப்புன்கூர் முதல் கொண்டல் வரை உள்ள சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் திருப்புன்கூர், வடக்கு வெளி, பெருமங்கலம், ஆதமங்கலம், கொண்டல் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக குண்டும்,குழியுமான சாலையினால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்