திருச்சி பொன்மலைப்பட்டி முல்லை நகரின் பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டுள்ளன. அந்த மூடியின் பக்கவாட்டில் இருந்து கம்பி ஒன்று வெளிவந்து நீட்டிக்கொண்டு இருக்கிறது. சாலையில் செல்பவர்கள் இந்த கம்பியில் கால் பட்டு தடுக்கி விழுகிறார்கள். சாலையில் செல்லும் வாகனங்களும் தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.