சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-08 14:48 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பேரண்டப்பள்ளி ஊராட்சி பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம் பாஸ்கர்தாஸ் நகர் உள்ளது. இங்கிருந்து முனீஸ்வரர் நகர் செல்லும் வழியில் சிலர் சாலையின் இருபுறமும் குழியை தோண்டி பாறாங்கற்களை சாலையில் புரட்டி போட்டுள்ளனர். இதனால் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலை குறுகலான தோண்டப்பட்டு, பெரிய பாறாங்கற்கள் சாலையிலேயே புரட்டிப்போடப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் கால்வாய்கள் அடைபட்டு சாலையிலேயே கழிவுநீர் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எப்போதும் கழிவுநீர் வெளியேறுவதால் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்