விருத்தாசலம் வீரபாண்டியன் நகர் அம்பேத்கர் தெரு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை முறையான பராமரிப்பு இன்றி சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் தற்போது பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கி வருகின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகம், உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.