திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் நாய்கள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவை அந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, கோழிகளை கடித்து தின்று விடுகின்றன. அதுமட்டுமின்றி சாலையில் நடந்து செல்லும் பெண்கள்,குழந்தைகளை நாய்கள் விரட்டி செல்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். மேலும் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?