திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை மாடுகள் அவ்வப்போது முட்டிவிடுகின்றன. இதனால் சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் மாடுகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்வதால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?