கோவை பாலசுந்தரம் சாலையில் சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா அருகே நடைபாதையில் 3 இடங்களில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டு உள்ளன. இவை நடைபாதையை ஆக்கிரமித்து இருந்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்கும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.