ராமநாதபுரம் மாவட்டம் தெற்குத்தரவை பஞ்சாயத்து முடுக்குத்தரவை பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளது. இந்த கருவேல மரங்களால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் சாலை குறுகலாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகளின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையை விரிவாக்கம் செய்வதுடன், கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.