கரூர் மினி பஸ் நிலையத்தின் நுழைவு வாயில் சாலை நீண்ட நாட்களாகவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மினி பஸ் டிரைவர்கள் மற்றும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் சிலர் கால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தும் வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.