மதுரை சூர்யாநகர் விரிவாக்கம், மீனாட்சி அம்மன் நகர் 40 அடி சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியில் பள்ளிகூடம் செயல்பட்டு வருவதால் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?