திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் மலைக்கோவில் பிரகாஷ் நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி காணப்படுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.