புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி ஊராட்சி வடக்குவீதி முன்சிப் தெரு மற்றும் காதரப்பா தெருவில் சாலை வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் மழைபெய்யும்போது சேறும், சகதியுமான சாலையில் நடக்க முடியாமல் நடந்து சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.