பெரம்பலூர் மாவட்டம், வல்லாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் செல்லும்போது புழுதி பறப்பதினால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.