போக்குவரத்திற்கு இடையூறாக விளம்பர பதாகைகள்

Update: 2022-08-05 11:17 GMT
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைத்தெரு வழியாக அரசு ஆஸ்பத்திரி, மேல்நிலைப்பள்ளி, அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். இந்த சாலையின் இருபுறமும் பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலர் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் வைக்கப்படும் விளம்பர பதாகைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்