சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-08-04 15:59 GMT

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் நான்குமுனை முச்சந்தி கடைத்தெரு சாலை பராமரிப்பின்றி ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும், சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்

சாலை வசதி