தார்சாலை வேண்டும்

Update: 2022-08-04 15:13 GMT
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி களஞ்சேரி வெண்ணாற்று பாலத்தில் இருந்து வெண்ணபுத்தூர் செல்ல சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்

சாலை வசதி