அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா அலுவலகம் முதல் ஆதிக்குடிக்காடு வரை உள்ள சாலை சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என அனைவரும் மிகவும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.