குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-03 16:35 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்கிய சாலைகள் பாதாள சாக்கடை பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் எழும் புழுதியால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதிலும் குறிப்பாக சாத்தூர் முக்குராந்தல் பகுதி, வெம்பக்கோட்டை சாலையில் எழும் புழுதியால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர். இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்