கோவை வெள்ளக்கிணறு சவுடாம்பிகை நகரில் 40 அடி சாலை உள்ளது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.