ஊத்துமலை பஸ் நிறுத்தம் அருகில் சங்கரன்கோவில் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இந்த பள்ளம் மூடப்படாமல் உள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தை விரைந்து மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.