ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட விகாஸ் நகர், அன்னை நகர், எஸ்.எம்.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் மழையால் மிகவும் சேதமடைந்து உள்ளது. வயதானவர்கள், பெண்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் போர்க்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
-எஸ்.அரவிந்த், எஸ்.எம்.நகர், ஓசூர்.